Show all

தமிழகத்தில் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தினால் பாஜக ஆதரிக்கும் -தமிழிசை

தமிழகத்தில் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

     தமிழர்களின் வீரவிளையாட்டான சல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி பீட்டா அமைப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த ஆண்டு சல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் சல்லிக்கட்டு நடைபெறவில்லை.

     இதனிடையே சல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

     இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், பொங்கல் பெருவிழாவிற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை.

     தமிழகத்தில் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் எனவும் அவர் கூறினார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.