Show all

சல்லிக்கட்டுக்கு கடல் கடந்தும் பெருகும் ஆதரவு; ஜெர்மனியில் பேரணி நடத்திய தமிழர்கள்

ஜெர்மனி நாட்டின், பிராங்பேர்ட் நகரில் தமிழ் பெண்களும், ஆண்களும் பதாகைகளை ஏந்தியபடி சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.

     தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜெர்மனியில் தமிழர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

     காளையைக் காட்சி பட்டியலில் சேர்த்ததன் மூலம், தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் உள்ளது. காளையை காட்சி பட்டியலில் இருந்து நீக்கி சட்ட திருத்தம் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது நடுவண் அரசு. மேலும் அவசர சட்டம் பிறப்பிக்கவும் அது பின்வாங்குகிறது.

     தமிழக கட்சிகளை பொறுத்தளவில் நடுவண் அரசிடம் நெருக்கடி கொடுத்து சல்லிக்கட்டு நடத்த சட்டத் திருத்தம் செய்ய வைப்பதில் படுதோல்வி அடைந்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.